பொதுஜன பெரமுனவின் உத்தியோகபூர்வ தலைவர் மஹிந்த

ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி

கொழும்பு சுகததாச விளையாட்டு அரங்கில் அறிவிக்கப்படும்



பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவை கட்சியின் தலைவராக உத்தியோகபூர்வமாக அறிவிக்க உள்ளதாக அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி கொழும்பு சுகததாச விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கட்சியின் பிரதிநிதிகள் மற்றும் சகோதர கட்சிகளுக்கு தேசிய மாநாட்டில் கலந்துக்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட உள்ளது.மஹிந்த ராஜபக்ஸ, அடுத்த ஜனாதிபதி வேட்பாளரை கட்சியின் தேசிய மாநாட்டில் அறிவிக்க உள்ளதாகவும் அந்த வேட்பாளருக்கு தனது முழுமையான ஆதரவு வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top