தென்னாபிரிக்க ஜனாதிபதி
- பிரதமருக்கிடையில் சந்திப்பு
தென்னாபிரிக்க
ஜனாதிபதி சிறில்
ரம்போசா குறுகிய
விஜயத்தை மேற்கொண்டு
இன்று இலங்கைக்கு
விஜயம் செய்தார்.
ஜி
20 அமைப்பில் கலந்துக்கொள்வதற்காக ஜப்பான்
சென்ற வழியில்
அவர் இலங்கைக்கு
வந்தார்.
தென்னாபிரிக்க ஜனாதிபதியுடன் 20 பேரைக் கொண்ட குழுவினர் வந்துள்ளனர்.
இந்த குழுவினரை
வரவேற்பதற்காக பிரதமர் ரணில் விக்கரமசிங்க மற்றும்
அமைச்சர் அர்ஜுன
ரணதுங்க கட்டுநாயக்க
சர்வதேச விமான
நிலையத்துக்கு சென்றிருந்தனர்.
தென்னாபிரிக்க
ஜனாதிபதி அந்நாட்டின்
இராணுவத்துக்கு சொந்தமான இராணுவ விஷேட விமானத்தில்
வந்திருந்தார். இந்த விமானத்துக்கு தேவையான எரிபொருள்
இங்கு நிரப்பப்பட்டது.
காலை 10.20 இற்கு வருகை தந்த தென்னாபிரிக்க
ஜனாதிபதி உள்ளிட்ட
குழுவினர் பிற்பகல்
12.30 மணியளவில் இங்கிருந்து பயணமானார்கள்
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.