சஹ்ரானின் மனைவி இன்று காலை
கல்முனை நீதவான் நீதிமன்றில்
இலங்கையில்
இடம்பெற்ற உயிர்த்த
ஞாயிறு தற்கொலைத்
தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான, பயங்கரவாதி சஹ்ரானின்
மனைவி இன்று
காலை கல்முனை
நீதவான் நீதிமன்றில்
முன்னிலைப்படுத்தப்பட்டார்.
சாய்ந்தமருது
குண்டுவெடிப்பு மற்றும் சஹ்ரான் குழு தொடர்பில்
அவர் வழங்கிய
வாக்குமூலத்தினடிப்படையிலேயே இன்றைய தினம்
நீதவான் ஐ.என்.ரிஸ்வான்
முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
சாய்ந்தமருதில்
இடம்பெற்ற குண்டுவெடிப்பிற்கு
முன்னர் சஹ்ரான்
குழுவால் சிலருக்கு
பணம் விநியோகிக்கப்பட்டதாக
தீவிரவாதி சஹ்ரானின்
மனைவி சாட்சியமளித்துள்ளார்.
குறித்த
பணம் பெற்ற
நபர்களை தன்னால்
அடையாளம் காட்டமுடியும்
என்றும் அவர்
விசாரணைப் பிரிவிடம்
கூறியுள்ளார்.
இதனையடுத்தே
அவர் இன்று
நீதிமன்ற விசாரணைகளுக்காக
அழைத்துவரப்பட்டதாக பொலிஸ் தரப்பில்
கூறப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.