கிளிநொச்சி விபத்து;
பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு

கிளிநொச்சி, பாரதிபுரம் சந்தியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொரு இராணுவ வீரர் பலியாகியுள்ளார்.

இதற்கமைய, இவ்விபத்தில் உயிரிழந்த இராணுவ வீரர்களின் எண்ணிக்கை 06ஆக உயர்வடைந்துள்ளதாக. பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

நேற்று (25) கிளிநொச்சி, பாரதிபுரம் சந்தியில் பாதுகாப்பற்ற ரயில் கடவையில் தண்ணீர் கொண்டுவந்த இராணுவ ட்ரக் வண்டியும் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற ரயில் வண்டியும் மோதி விபத்திற்குள்ளானதில், சம்பவ இடத்தில் 05 பேர் உயிரிழந்ததோடு, 02 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்தனர்.

இச்சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து யாழ். போதனா வைத்தியசாலையில் மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த இராணுவ வீரர் ஒருவரே இவ்வாறு  உயிரிழந்துள்ளார்.




0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top