திடீரென்று வந்த பேரலை
குடும்பத்தையே இழுத்துச் சென்றது!
தந்தையும் மகளும் பலி!!



ஹம்பாந்தோட்டை, கிரிந்த யால கடல்பரப்பில் நிராடிக்கொண்டிருந்த இருவர் அலையில் அடித்துச் செல்லப்பட்டு பலியாகியிருப்பதுடன் மற்றுமிருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட நால்வரும் நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தவர்கள் என்பதுடன் தந்தையும் மகளுமே பலியாகியிருக்கின்றனர். மேலும், தாயும் மற்றொரு மகளும் மீட்கப்பட்டு வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நால்வரும் கிரிந்த கடலில் நீராடிக்கொண்டிருந்தபோது வந்த பாரிய அலையில் சிக்கி பலியாகியிருப்பதாக தெரியவந்திருக்கிறது.

இதேவேளை கிரிந்த உள்ளிட்ட தென்னிலங்கையின் கடற்பகுதிக்கு செல்லவேண்டாம் என்று இலங்கை வளிண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையிலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top