டுபாயிலிருந்து வருகைதந்த விமானத்தில்
சட்டவிரோதமானமுறையில்
சிகரெட்டுகளை
கொண்டுவந்த
இரண்டு ஜோடிகள் கட்டுநாயக்கவில் கைது
வெளிநாட்டில்
உற்பத்தி செய்யப்பட்ட
சிகரெட்டுகளை, சட்டவிரோதமானமுறையில் இலங்கைக்கு
கொண்டுவந்த நால்வர், கட்டுநாயக்க விமான நிலையத்தில்
வைத்து, இன்று
(24) அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
விமான
நிலைய சுங்கப்
பிரிவினர் மேற்கொண்ட
சோதனை நடவடிக்கையின்
போதே,
இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என,
சுங்கப் பிரிவின்
மேலதிக பணிப்பாளர்
தெரிவித்துள்ளார்.
சிலாபம்,
வென்னப்புவ பகுதிகளைச் சேர்ந்த திருமணமான ஜோடிகளே, இவ்வாறு
கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும், அவர்களுடன், 2 வயது
சிறுமியும் இருந்ததாக, சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
டுபாயிலிருந்து
வருகைதந்த விமானத்தில், கட்டுநாயக்க
விமான நிலையத்தை வந்தடைந்த
இவர்களின் பயணப்
பொதியிலிருந்து, 53,13,000 ரூபாய் பெறுமதியான
483 சிகரெட் பொதிகள்
கைப்பற்றப்பட்டுள்ளன.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.