நாடாளுமன்ற தெரிவுக்குழுவில்
முன்னிலையாக போவதில்லை!
ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன தெரிவிப்பு
நாடாளுமன்ற
தெரிவுக்குழு ஓர் நாடகமாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஊடகப்
பிரதானிகளுடன் இன்று காலை நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனை
குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவிக்கையில்,
ஈஸ்டர்
ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் நாடாளுமன்ற
தெரிவுக்குழுவின் நடவடிக்கைள் வெறும் நாடகம்.
இந்த
நாடகத்திற்கான பிரதி, அலரி மாளிகையில் எழுதப்படுகின்றது.
நாடாளுமன்ற தெரிவுக்குழுவினால் எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
அவ்வாறு
அழைப்பு விடுத்தாலும் தாம் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் முன்னிலையாக போவதில்லை என
அவர் கூறியுள்ளார்.
அத்துடன்,
ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றதன் பின்னர் இரண்டு
மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.