வைத்தியர்கள் மீது தாக்குதல்:
களுத்துறையில் எதிர்ப்பு போராட்டம்

களுத்துறை வைத்தியசாலையின் வைத்தியர்களையும் மக்களையும் தாக்கிய சந்தேக நபர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி களுத்துறை மாவட்ட அரச வைத்தியர்கள் அனைவரும் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு எதிராக வைத்திய சங்கத்தினரால் கொண்டுவரப்பட்டிருக்கும் எதிர்ப்பு மகஜரில் மக்களின் கையொப்பங்களை பெற்றுக் கொள்வதற்காக இன்று திங்கட்கிழமை களுத்துறை வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்த சிலரே வைத்தியர்களை அச்சுறுத்தியதாக அரச வைத்திய சங்கத்தின் உறுப்பினரான வைத்தியர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

அவர்களுக்கு எதிராக பொலிஸார் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி களுத்துறை மாவட்டத்தில் அனைத்து அரச வைத்தியர்களும் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக அரச வைத்திய சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

களுத்துறை வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்ட அடையாள பணிபுறக்கணிப்புக்கு பாணந்துறை மற்றும் ஹொரணை வைத்தியசாலைகளின் வைத்தியர்களும் ஆதரவு வழங்கி பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டனர்.




0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top