தனது கரங்களை வெட்டிவிடுங்கள்!
மர மனிதனின் சோகமான கோரிக்கை!!

பங்களாதேஷில் மரமனிதன் என வர்ணிக்கப்படும் அரிய நோய்த்தாக்கத்துக்கு உள்ளாகியுள்ள 28 வயது இளைஞன் தனது கரங்களை வெட்டி அகற்றுமாறு வைத்தியர்களை இறைஞ்சிய சம்பவம் நெகிழ்சியை ஏற்படுத்தியுள்ளது.

கைகளில் மரப்பட்டைபோன்ற தோற்றத்துடன் கூடிய அவலட்சணமான வளர்ச்சிக்கு உள்ளாகும் இந்த இளைஞன் சதை வளர்ச்சியால் ஏற்படும் 8 கிலோவுக்கு மேற்பட்ட பாரத்தை தாங்கமுடியாமல் கரங்களில் பெரும் வேதனையை அனுபவித்து வருகிறார்.

2016 ஆம் ஆண்டு முதல் இவருக்கு 25 தடவைகள் வைத்தியர்கள் அறுவைச்சிகிச்சை செய்து இந்த சதை வளர்ச்சியை அகற்றிவந்தாலும் வெட்டப்பட்ட இடத்தில் மீண்டும் மீண்டும் சதை மரப்பட்டை போல தொடர்ந்தும் வளர்வதால் தற்போது இந்த வேதனையை தாங்கமுடியாமல் தனது கரங்களை வெட்டி அகற்றுமாறு வைத்தியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.






0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top