ஜனாதிபதி மேற்கொண்டுள்ள
தீர்மானம்.....!
சிறிலங்கா
சுதந்திர கட்சி மேற்கொள்ளும் தீர்மானத்தில் அடிப்படையிலேயே எதிர்வரும் ஜனாதிபதி
தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தாம் தீர்மானம் மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஊடகப்பிரதானிகளுடன்
சற்று முன்னர் இடம்பெற்ற சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
அதேநேரம்
நாட்டில் ஸ்திரத்தன்மை இல்லை என்பதை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி, அதற்கு 19ம்
திருத்தச் சட்டமே காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்ததாக
யார் ஆட்சிக்கு வந்தாலும், அவர் நாட்டை நேசிப்பவராக இருந்தால் 19ம் திருத்தச் சட்டத்தை நீக்க நடவடிக்கை
எடுக்க வேண்டும்.
அதனை
நீக்கினால் மட்டுமே நாட்டுக்கு 2020ம் ஆண்டு சுபீட்சம் தருவதாக இருக்கும் என்றும் ஜனாதிபதி
கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.