மாதுளுவாவே சோபித தேரர்
இன்று உயிரோடு இருந்திருந்தால்
ஜனாதிபதியின் பேச்சைக்
கேட்டு கேட்டு
தற்கொலை செய்திருப்பார்.
இலங்கையில்
தற்போது நடைமுறையில் இருக்கும் 19ஆவது திருத்த சட்டமானது முழுமையாக அரச சார்பற்ற
நிறுவனங்களுக்காக உருவாக்கப்பட்டது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம்
சாட்டியுள்ளார்.
ஜனாதிபதி
மாளிகையில் இன்று காலை ஊடக பிரதானிகள் மற்றும் ஊடகவியலாளர்களை சந்தித்த போது
தெரிவித்துள்ளார்.
அத்துடன்
19 வது திருத்தம் நாட்டிற்கு ஒரு சாபக்கேடாகும் எனவும் அதிரடியாக தெரிவித்த ஜனாதிபதி, தற்போது
நடைமுறையில் இருக்கும் 19 ஆவது திருத்தினை ஒழித்தால் 2020 ஆம் ஆண்டு செழிமையான
நாடாக இலங்கை மாறும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த அரசியலமைப்பினால் தான்
நாட்டில் அரசியல் ஸ்திரம் இல்லாமல் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும்
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று யார் ஆட்சிக்கு வந்தாலும், 19 ஆவது
அரசியலமைப்பினை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த சந்திப்பின் போது
கோரிக்கை விடுத்தார்.
அடுத்த
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக சுதந்திர கட்சி எடுக்கும் எந்தவொரு
முடிவையும் நான் பின்பற்றுவேன் என்றும் மைத்திரி தெரிவித்துள்ளார்.
நாட்டின்
முக்கியமான சட்டத்தை சாபக்கேடு என கூறிய அவரது கருத்து அரசியலில் எத்தகைய
தாக்கத்தைச் செலுத்தப்போகின்றது என்பதை அடுத்துவரும் நாட்களில் காணலாம் என
கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
அரசியலமைப்பின்
19 வது திருத்த்த்தின் மூலம்
நாட்டில் அரசியலமைப்பு
கவுன்சில் உருவாக்கப்பட்டது.
சுயாதீன
ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டது.
ஜனாதிபதியின்
பதவிக்காலத்தை 6 இலிருந்து 5 வருடங்களாக வரையறுக்கப்பட்ட்து..
நீதித்துறையில்
அரசியல் தலையீடு செய்ய முடியாதபடி நிறைவேற்று அதிகாரத்தை கட்டுப்படுத்தப்பட்டது.
இப்படி பல
நன்மைகள் உள்ள 19 வது திருத்தம் ரத்துச் செய்யப்பட வேண்டும் என்று ஜனாதிபதி தற்போது
முன்னுக்குப்பின் முரணாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டை
நாசமாக்க நினைத்த அரச சார்பற்ற நிறுவனங்களுக்காக செய்த வேலை தான் இந்த
அரசியலமைப்பு திருத்தம் என்றும் கூறுகின்றார்.
மாதுளுவாவே
சோபித தேரர் இன்று உயிரோடு இருந்திருந்தால் ஜனாதிபதியின் பேச்சைக் கேட்டு கேட்டு
தற்கொலை செய்திருப்பார்..
ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேனவின் அதிரடிக் கருத்தினால் கொழும்பு அரசியலில் சற்று பரபரப்பு
நிலை தோன்றியுள்ளதாக நோக்கர்கள் கூறியிருக்கின்றனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.