கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த
வைத்தியசாலைக்கு முன்பாக
வீதியோரத்தில் தரித்திருந்த
 முச்சக்கரவண்டி மீது தாக்குதல்

வீதியோரத்தில் தரித்திருந்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் அது பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு முன்பாக நேற்று மாலை தரித்திருந்த கறுப்பு நிற முச்சக்கர வண்டி ஒன்றின் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான முச்சக்கரவண்டியின் முன் கண்ணாடி உட்பட சில பொருட்கள் சேதமடைந்துள்ளன.

சம்பவ இடத்திற்கு வந்த இனந்தெரியாத ஒருவர் வீதியோரத்தில் இருந்த இரும்பு கம்பி ஒன்றை எடுத்து முச்சக்கரவண்டியை தாக்கியதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

முச்சக்கர வண்டியின் உரிமையாளர் கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு சென்று தாக்குதல் மேற்கொண்ட நபரை அடையாளம் கண்டு முறைப்பாடு செய்துள்ளார்.

மேற்குறித்த சம்பவமானது தனிப்பட்ட குரோதத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.




0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top