ஐந்து மாதங்களாக தாபரிப்பு பணம் செலுத்தாத
நபரொருவருக்கு ஒரு மாதம் சிறைதண்டனை
மூதூர் நீதிமன்ற நீதிவான் இன்று உத்தரவு
திருகோணமலை
- சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒரு
குழந்தைக்கு 25,000 ரூபா தாபரிப்பு
பணம் செலுத்தாத
நபரொருவருக்கு ஒரு மாதம் சிறைதண்டனை விதித்து
மூதூர் நீதிமன்ற
நீதிவான் இன்று
உத்தரவிட்டுள்ளார்.
திரித்துவ
பகுதியைச் சேர்ந்த
47 வயதுடைய ஒருவருக்கே இவ்வாறு சிறை தண்டனை
விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த
சந்தேநபர் திருமணம்
முடித்து ஒரு
குழந்தைக்கு மாதாந்தம் ஐயாயிரம் ரூபா தாபரிப்பு
செலுத்தி வந்த
நிலையில் ஐந்து
மாதங்களாக 25,000 ரூபா தாபரிப்பு பணம் செலுத்தாது
தலைமறைவாக இருந்த
நிலையிலே மனைவி
பொலிஸ் நிலையத்தில்
மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய,
பொலிஸார் இவரை
கைது செய்து
மூதூர் நீதிமன்ற
நீதிவான் முன்னிலையில்
ஆஜர்படுத்தியுள்ளனர்
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.