பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர்
வைத்தியசாலையில் அனுமதி
புத்தளம் மாவட்ட எம்.பி ஒருவரின்
மகனால் தாக்கப்பட்டாராம்!!
ஆளுங்கட்சி
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மகன் பொலிஸ்
உத்தியோகத்தர் ஒருவரைத் தாக்கிய சம்பவம் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
ஐக்கிய
தேசிய கட்சியின்
புத்தளம் மாவட்ட
நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த சிசிர அபேசேகரவின்
மகன் ஒருவரே
இந்த தாக்குதலை
மேற்கொண்டுள்ளார்.
இதில்
பிரமுகர்களின் பொலிஸ் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர்
காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரமுகர்கள்
பாதுகாப்பு சேவையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள்
சுசந்த அருண
குமார என்பவரே
இவ்வாறு தாக்குதலுக்கு
உள்ளாகியுள்ளார்.
இவர்
காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட
பின்னர் சிலாபம்
பொலிஸ் நிலையத்தில்
முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து
நாடாளுமன்ற உறுப்பினரின் மகனைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள
தாம் மேற்கொண்டுள்ளதாக
பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை,
புத்தளம் மாவட்ட
நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த சிசிர அபேசேகரவும்
சிலாபம் பொலிஸ்
நிலையத்தில் இதுகுறித்த முறைப்பாடு ஒன்றை பதிவு
செய்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
எவ்வாறாயினும்
சம்பவம் தொடர்பில்
சிலாபம் பொலிஸார்
மேலதிக விசாரணைகளை
மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.