வாகனங்களில் சத்தமாக பாடல் ஒலி எழுப்பத் தடை
மீறினால் 3000ரூபா தொடக்கம் 5000 ரூபா வரை தண்டம்
வாகனங்களில் பாடல்களை சத்தமாக ஒலி எழுப்ப பொலிஸார் தடை விதித்துள்ளனர். மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் இவ்வாறான குற்றங்களை மேற்கொள்பவர்களிடமிருந்து தண்டப்
பணம் அறவிடப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இதன்படி வாகனமொன்று பயணிக்கும் போதோ அல்லது அது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் போதோ பாடல்களைப் போட வேண்டுமாயின், அதில் பயணிப்பவர்கள் மாத்திரமே கேட்கக்கூடிய வகையில் அவை ஒலிபரப்பப்பட வேண்டும்.
இதனை மீறிச் செயற்படுபவர்களுக்கு 3000 ரூபா தொடக்கம் 5000 ரூபா வரையில் தண்டம் அறவிடப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.