எனது வீட்டிற்கு வரும் அனைத்து வாகனங்களும்
சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன
மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி குற்றச்சாட்டு

தமது வீட்டிற்கு வருகைதரும் அனைத்து வாகனங்களும் பொலிஸாரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி குற்றஞ்சாட்டுகின்றார்.
காலையில் இருந்து துப்பாக்கி ஏந்திய இரண்டு பொலிஸார் எனது வீட்டிற்கு அருகில் நின்றவாறு, வீட்டிற்கு வரும் அனைத்து வாகனங்களையும் சோதனையிடுகின்றனர். வாகனங்களை நிறுத்தி, வாகனங்களின் இலக்கங்களை பெற்றுக்கொண்டு, தேசிய அடையாள அட்டையை சோதனையிட்டு, அசாத் சாலி வீட்டிற்கு எதற்காக வருகின்றீர்கள்? என்ன விடயம் என கேட்கின்றனர். இதற்காகத் தான் பொலிஸார் இருக்கின்றனர். கொலை செய்பவர்களை பிடிப்பதற்கு முடியாது. அளுத்கம, பேருவளை மற்றும் பானந்துறை ஆகிய நகரங்களை சேதப்படுத்தியவர்களை பிடிப்பதற்கு முடியாது, நாட்டில் தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தி, அனைவரும் அமைதியுடன் இருக்க வேண்டுமென தெரிவிக்கும் எம்மிடமே வருகின்றனர். பொலிஸார் எவ்வாறான செயலை செய்கின்றனர் எனப் பாருங்கள். பொலிஸ் மாஅதிபருக்கு தொடர்புகொண்டேன். அவரது பிரத்தியேக செயலாளர் விடயத்தினை சொல்வதாக கூறினார். இதனை தெரியப்படுத்துவதற்காகவே, ஊடகங்களுக்கு அழைப்பு விடுத்தேன். இவ்வாறு மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி தெரிவிக்கின்றார்.

          
 

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top