கல்வி நிலையங்களில்
ராக்கிங்கில் ஈடுபடுவதை
கிரிமினல்
குற்றமாக அறிவிக்க
இந்திய மத்திய அரசு திட்டம்
கல்வி
நிலையங்களில் ராக்கிங்கில் ஈடுபடுபவர்களுக்கு
3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம்
அபராதம் விதிக்கும்
வகையில், அதனை
கிரிமினல் குற்றமாக
அறிவிக்க இந்திய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
குழந்தைகள்
உரிமைகள் பாதுகாப்புக்கான
இந்திய தேசிய கமிஷன் கடந்த
2009-10 ஆண்டில் 6700 மாணவர்களிடையே மேற்கொண்ட
ஆய்வின் அடிப்படையில்
99 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள்
தாங்கள் ராக்கிங்
உள்ளிட்ட பல்வேறு
வகைகளிலும் கொடுமைப்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளனர்
எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கல்வி
நிலையங்களில் ராக்கிங் கொடுமைகளை தடுக்கும் வகையில்
அந்த குற்றங்களில்
ஈடுபடுபவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை
தண்டனை மற்றும்
ரூ.10 ஆயிரம்
அபராதம் விதிக்கும்
வகையில் சட்டத்
திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று இந்திய அரசின் பெண்கள்
மற்றும் குழந்தைகள்
நல அமைச்சகம்
தெரிவித்து உள்ளது. சிறார் நீதி சட்டத்திலும்
இந்த குற்றங்களை
தண்டனைக்கு உரியதாக சேர்க்கும் வகையில் திருத்தங்கள்
மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
பள்ளிக்
குழந்தைகளுக்கு உடல் ரீதியான தண்டனை, தீவிர
காயமேற்படுத்துதல் மற்றும் மனரீதியான
உளைச்சல் ஏற்படுத்துவதற்கும்
மூனறாண்டு சிறைத்தண்டனை
மற்றும் ரூ.50
ஆயிரம் அபராதம்
விதிக்கவும் திட்டமிட்டுள்ளது. இவை தவிர, அக்குற்றங்களில்
ஈடுபடும் ஆசிரியர்
உள்ளிட்ட ஊழியர்களை
பணி நீக்கம்
செய்யவும் இச்சட்டத்
திருத்தத்தில் வழிவகை ஏற்படுத்தப்படும்.
இந்த
திருத்தங்கள் அடங்கிய மசோதா மீது மத்திய
அமைச்சரவையின் ஒப்புதல் பெற்று இந்த மசோதாக்கள்
எதிர்வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்திய பாராளுமன்றத்தில்
தாக்கல் செய்யப்படும்
என்றும் இந்திய அரசாங்கத்தின் பெண்கள்
மற்றும் குழந்தைகள்
நல அமைச்சக
வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இச் சட்டத்தை இலங்கை நாட்டிலும் நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலராலும் கோரிக்கை விடுக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.