தீவிரவாதிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி!

பாக்தாத் அருகேயுள்ள எரிவாயு வயல் நகரை கைப்பற்றினர்!!

ஈராக்கில் வடக்கு மற்றும் மேற்கு நகரங்களை கைப்பற்றியுள்ள சன்னி முஸ்லிம் பிரிவு .எஸ்..எஸ். தீவிரவாதிகள் தொடர்ந்து முன்னேறி செல்கின்றனர் என அறிவிக்கப்படுகின்றது.
 தலைநகர் பாக்தாத்தில் இருந்து ஒரு மணி நேர பயணத்தில் சென்றடையக்கூடிய மன்சவுரியத் அல் ஜபால் நகரை தீவிரவாதிகள் கைப்பற்றி விட்டனர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நகரத்தில் 4 இயற்கை எரிவாயு வயல்கள் அமைந்துள்ளன. இந்த இயற்கை எரிவாயு வயல்களை வெளிநாட்டு நிறுவனங்கள் இயக்கி வருகின்றன. இது தீவிரவாதிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியாக கருதப்படுகிறது.
இதற்கிடையே, ஈராக்கில் இப்போது அரசு படைகளுடன் தீவிரவாதிகள் நடத்தி வருகிற உள்நாட்டுப் போரில் 1000-க்கும் அதிகமாக அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கூறி உள்ளது.

இந்தப் போர் பல்லாயிரக்கணக்கானோரை இடம் பெயரவும் வைத்துள்ளது. இதன்காரணமாக ஈராக்கை இடப்பெயர்ச்சி பூமி என்று .நா. அகதிகள் முகமையின் மத்திய கிழக்கு,, வட ஆப்பிரிக்க பிரிவின் இயக்குனர் ஆமின் அவாத் கூறி இருக்கிறார்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top