ஈராக்கில் இஸ்லாமிய
தனி நாடு:
போராளிகள்
அறிவிப்பு
சிரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள அலெப்போ
முதல் ஈராக்கின் கிழக்குப் பகுதியில் உள்ள டியாலா மாகாணம் வரையுள்ள பகுதிகளை தனி இஸ்லாமிய
நாடாக இ.எஸ்.இ.எல். போராளிகள் அறிவித்துள்ளனர்., தங்களது அமைப்பின் தலைவர் அபுபக்கர்
அல்-பாக்தாதியை புதிய கலிஃபா (இஸ்லாமிய மதத்தை வழிநடத்தும் நபிகளின் வாரிசு அதாவது
மதத் தலைவர்) என்று அறிவித்துள்ளதுடன், இனிமேல் அவர் கலிஃபா இப்ராஹிம் என்று அழைக்கப்படுவார்
எனவும் தெரிவித்துள்ளது.
ஈராக்
மற்றும் சிரியாவில்
தாங்கள் கைப்பற்றிய
பகுதிகளை கிலாஃபத்
கோட்பாட்டைப் பின்பற்றும் தனி இஸ்லாமிய நாடாக
சன்னி பிரிவைச்
சேர்ந்த இ.எஸ்.இ.எல்.போராளிகள் திங்கள்கிழமை
அறிவித்தனர்.
இந்த
நிலையில், போராளிகளின்
பிடியில் உள்ள
நகரங்களை மீட்க
ஈராக் இராணுவம்
இடைவிடாமல் தாக்குதல் நடத்தி வருகிறது.
இது
குறித்து பாக்தாதில்
செய்தியாளர்களிடம் அந்நாட்டு இராணுவ
லெப்டினன்ட் ஜெனரல் காசிம் அட்டா கூறுகையில்,
""திக்ரித் நகரை சுற்றி
பல்வேறு பகுதிகளில்
இருந்து பாதுகாப்புப்
படை முன்னேறி
வருகிறது. அங்கு
இராணுவத்துக்கும், போராளிகளுக்கும் இடையே
கடும் சண்டை
நீடித்து வருகிறது.
இராணுவ
வீரர்கள் அந்த
நகருக்குள் நுழையும் அனைத்து வழிகளிலும், போராளிகள் இரு வாரங்களுக்கு முன்
புதைத்து வைத்திருந்த
கண்ணி வெடிகள்
செயல் இழக்கச்
செய்யப்பட்டன.
அமெரிக்க
இராணுவ ஆலோசகர்களின்
ஒத்துழைப்புடன், போராளிகளின் இலக்குகளை குறிவைத்து ஈராக்
இராணுவம் தீவிர
தாக்குதல் நடத்தி
வருகிறது'' என்றார்.
இந்நிலையில்,
ஈராக் இராணுவத்தின்
வான் வழித்
தாக்குதலுக்கு உதவும் வகையில், தனது போர்
விமானங்களை ரஷியா தொடர்ந்து வழங்கி வருகிறது.
சதாம்
ஹுஸைன்
மாளிகை தகர்ப்பு?
இதனிடையே,
திக்ரித்தில் உள்ள முன்னாள் அதிபர் சதாம்
ஹுஸைன் மாளிகை
வளாகத்திற்குள் இராணுவ விமானங்கள் குண்டுகளை வீசியதில்
பெரும் புகைமண்டலமாக
காட்சியளித்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இராணுவத்தின்
தாக்குதல் தீவிரமடைந்துள்ள
நிலையிலும், தாங்கள் கைப்பற்றிய பகுதிகளை ஒருங்கிணைத்து
தனி இஸ்லாமிய
நாடாக இ.எஸ்.இ.எல். போராளிகள்
அறிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிரியாவின்
வடக்குப் பகுதியில்
உள்ள அலெப்போ
முதல் ஈராக்கின்
கிழக்குப் பகுதியில்
உள்ள டியாலா
மாகாணம் வரையுள்ள
பகுதிகளை இவ்வாறு
தனி இஸ்லாமிய
நாடாக இ.எஸ்.இ.எல். போராளிகள்
அறிவித்துள்ளனர். மேலும், தங்களது அமைப்பின் தலைவர்
அபுபக்கர் அல்-பாக்தாதியை புதிய
கலிஃபா (இஸ்லாமிய மதத்தை வழிநடத்தும் நபிகளின் வாரிசு அதாவது மதத் தலைவர்) என்று அறிவித்துள்ளதுடன்,
இனிமேல் அவர்
கலிஃபா இப்ராஹிம்
என்று அழைக்கப்படுவார்
எனவும் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.