இலங்கையிலிருந்து
தேயிலைத் தூளில் தங்கம் கலந்துகடத்திச் சென்ற
இலங்கை வாலிபர் சென்னை விமான நிலையத்தில் கைது!
இலங்கையில் இருந்து தேயிலைத்தூளில் தங்கத்தை கலந்து
கடத்திச் சென்ற இலங்கை வாலிபரை சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா
அதிகாரிகள் கைது செய்துள்ளனர் என அறிவிக்கப்படுகின்றது.
சென்னை
மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு
இலங்கையில் இருந்து விமானம்சென்றது. அதில் சென்ற பயணிகளை
சுங்க இலாகா
அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது இலங்கையைச்
சேர்ந்த ஞானமதிகுமார்
(வயது 32) என்பவர்
சென்றிருந்தார். இவர் சுற்றுலா விசாவில் சென்னை
சென்றிருந்தார்.
இவர்
மீது சந்தேகம்
கொண்ட சுங்க
இலாகா அதிகாரிகள்
இவரை விசாரித்தனர். இவர் முன்னுக்குப்பின்
முரணாக பேசியதால்
தனியறைக்கு அழைத்து சென்று அதிகாரிகள் தனியாக விசாரித்தனர்.
இவரது உடைமைகளை
சோதனை செய்தபோது,
அங்கு தேயிலத்தூள்
இருந்தது. அதை
பிரித்து பார்த்தபோது
அதில் தங்கத்தை
பொடியாக்கி அதில் கலந்து கடத்திக்கொண்டு வந்தது
தெரியவந்தது. தேயிலைத்தூளில் இருந்து (இந்திய ரூபாவில்)
ரூ.15
லட்சம் மதிப்புள்ள
தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள் என்று அறிவிக்கப்படுகின்றது. கடத்தலில் ஈடுபட்ட இவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி
வருகின்றனர். கடத்தலுக்கு பின்னணியில் உள்ளவர்கள் பற்றியும்
விசாரித்து
வருகின்றனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.