கைதி மாரடைப்பால் துடித்த போது

காப்பாற்றாமல் ஆபாசபடம் பார்த்த பொலிஸார்!

சிறையில் கைதி ஒருவர் மாரடைப்பால் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நேரத்தில் கைதியை காப்பாற்றாத பொலிஸ்காரர்கள், ஆபாச படம் பார்த்துக்கொண்டிருந்த சம்பவம் ஒன்று பிரிட்டனில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனில் உள்ள பிரிம்மிங்காமில் குடிபோதை வழக்கில் லிலோய்ட் பட்லர்(36 வயதுஎன்பரை கைது செய்த பொலிஸார், மறுநாள் காலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக பிரிம்மிங்காமில் உள்ள  ஸ்டீச்போர்டு காவல் நிலையத்தில் அடைத்து வைத்திருந்தனர்.
அங்கு கைதி லிலோய்ட்  பட்லருக்கு திடீர் என மாரடைப்பு ஏற்பட்டது அப்போது அவர்  பொலிஸ்காரர்களை  பார்த்து உதவி செய்யும்படி துடித்தபடி வேண்டுகோள் விடுத்தார். இதனை பொறுப்படுத்தாத பொலிஸ்காரர்கள் தங்களது கணிணியில் ஆபாச படம் பார்த்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் 3 மணி நேரத்திற்கு மேல் மருத்துவசதி எதுவும் அந்த கைதிக்கு கிடைக்காததால் அவர், வலியால் துடித்தபடி இறந்தார். இந்த சம்பவம் காவல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த உயர்அதிகாரிகள்  மருத்துவ உதவி செய்யாமல் ஆபாச படம் பார்த்த  பொலிஸ்காரர்கள் இரண்டு பேரையும் பணியிடை நீக்கம் செய்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top