அளுத்கம தர்கா நகர் பேருவல பகுதி அசம்பாவிதங்களைக்
கண்டித்து சவூதி
அரேபியாவில் ஆர்ப்பாட்டம்
அளுத்கம,
தர்கா நகர், பேருவல பகுதியில் முஸ்லிம்களுக்கெதிராக
இடம்பெற்ற உயிரிழப்புக்கள்,
அசம்பாவிதங்கள் என்பவற்றைக் கண்டித்தும் முஸ்லிம்களுக்கு
பாதுகாப்பு உத்தரவாதம் கோரியும் நேற்று (29-06-2014) இலங்கைத்
தொழிலாளர்களால் சவூதிஅரேபியா - ஜித்தாவில்
உள்ள இலங்கைத்தூதரகத்திற்கு
முன்னால் கவனயீர்ப்பு
போராட்டம் ஒன்று
இடம்பெற்றுள்ளது.
இக்
கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பல கோஷங்கள்
அடங்கிய சுலோகங்களை
ஏந்தி நின்றனர்.
இக்
கவனயீர்ப்பு நிகழ்வில் கலந்து கொண்டவர்கள்
தாக்குதலில் மரணித்தவர்களுக்காக ஜனாஸாத் தொழுகை ஏற்பாடு செய்து அதனை நிகழ்த்தியதுடன் துஆப்
பிரார்தனையிலும் ஈடுபட்டனர். முடிவில் இலங்கைத் தூதரகத்தில்
மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டதாகத்
தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.