மன்னிப்புக்
கேட்கவே தகுதியற்ற வகையில்
மன்னிப்பைக்
கோருகிறோம்
நரேந்திர
மோடிக்கு ஜெயலலிதா
எழுதும் 'லெட்டர்கள்’
எந்த அளவுக்கு
அர்த்தமுள்ளவை - என்ற தலைப்பில் இந்திய பிரதமர்
நரேந்திர மோடி,
தமிழக முதல்வர்
ஜெயலலிதாவின் படத்துடன் இலங்கை இராணுவ இணையதளத்தில்
ஒரு கட்டுரை
பிரசுரிக்கப் பட்டிருந்தது. இந்தக் கட்டுரைக்கு தமிழகத்தில்
பலத்த எதிர்ப்பு
கிளம்பியது.
இதை
அடுத்து, இலங்கை
இராணுவ இணையதளத்தில்
இது குறித்து
தாங்கள் மன்னிப்புக்
கேட்கவும் தகுதியற்ற
வகையில் இந்த
மன்னிப்பைக் கோருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுரை
சரியான வகையில்
பார்வையிடப்படாமல் வெளியாகிவிட்டதாகவும், இது இலங்கை இராணுவ மற்றும்
நகர அபிவிருத்தி அமைச்சின் அதிகாரபூர்வமான கருத்தை வெளிப்படுத்தவில்லை என்றும், அந்தக் கட்டுரை இணையத்தில்
இருந்து நீக்கப்
பட்டு விட்டதாகவும்
இலங்கை இராணுவ
இணைய தளத்தில்
மன்னிப்பு கோரப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.