மஞ்சள் கடவையின் விபத்துக்களை
தவிர்க்க
நாளை விசேட
நடைமுறை
மஞ்சள்
கடவையில் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்க விசேட திட்டமொன்று நாளை பெப்ரவரி முதலாம்
திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதன்
முதற்கட்ட நடவடிக்கையாக கொழும்பு மாநகர அதிகார சபையுடன் இணைந்து மாநகர சபைக்குட்பட்ட
பாதுகாப்பற்ற நிலைமைகள் ஆராயப்படவுள்ளதாக, வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தலைவர்
கலாநிதி சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.
கடந்த
மாதத்தில் பாதுகாப்பற்ற வீதி கடவைகளால் ஏற்பட்ட விபத்துகளில் 10ற்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்.
இதன் காரணமாகவே இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக கூறியுள்ளார்.
இந்த
விசேட நடவடிக்கையை மேற்கொண்டு அதன் மூலம் மஞ்சள் கடவையை பாதுகாப்பாக பயன்படுத்துவது
தொடர்பான திட்டத்தை அமுல்படுத்தப்படவுள்ளதாக சிசிர மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.