தென்னிலங்கை அரசியல் சக்திகளின் பின்னணியில்

சிங்கள மாணவர்கள்


யாழ் பல்கலைக்கழகத்தில் சர்ச்சைக்குரிய சுவரொட்டிகள்




யாழ்.பல்கலைக்கழக வளாகத்திற்குள் பெளத்த விகாரை அமைக்கப்பட வேண்டும் எனக்கோரி துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.
பல்கலைக்கழக வளாகத்திற்குள் கலைப்பீடப் பகுதியில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட மேற்படி துண்டு பிரசுரங்கள் இன்று காலை அவதானிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் குழப்பமான நிலமையை உருவாக்கி மீண்டும் குளிர்காய தென்னிலங்கை அரசியல் சக்திகளின் பின்னணியில் சில சிங்கள மாணவர்கள் தயாராகி உள்ளார்கள்.
இதன் ஒரு கட்டமாக தற்போது யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் பௌத்த விகாரை அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முகம் தெரியாதவர்கள் மறைமுகமாக துண்டுப்பிரசுரங்களை ஒட்டி குழப்பத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தும் வகையில் ஈடுபட்டுள்ளார்கள்.

கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக சிங்கள் மாணவர்கள் கல்வி கற்கின்றபோதிலும் இது வரையில் இத்தகைய கோரிக்கை எதுவும் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எந்தவொரு மாணவர் அமைப்பும் முன் வைக்கவில்லையென பல்கலைக்கழக உயர் மட்ட அலுவலர்கள் தெரிவித்துள்ளார்கள்.

யாழ் பல்கலைக்கழக பௌத்த மாணவர் ஒன்றியம் இலங்கைஎன பெயர் குறிப்பிடப்பட்டே இந்த துண்டுப்பிரசுரம் ஒட்டப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top