இன்று இடம்பெறவிருக்கும்
‘கல்முனை மாநகரம்- உள்ளூராட்சியும் சிவில் நிர்வாகமும்’
நூல் அறிமுக விழா!
கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.பரக்கத்துல்லாஹ் எழுதிய ‘கல்முனை மாநகரம்- உள்ளூராட்சியும் சிவில் நிர்வாகமும்’ எனும் நூலின் அறிமுக விழாவும் முதுசங்கள் கௌரவிப்பும் இன்று 23 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 3.45 மணி தொடக்கம் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி சேர் ராசிக் பர்த் மண்டபத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சட்டத்தரணி எம்.சி.ஆதம்பாவா தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர் நாயகம் ஏ.எல்.அப்துல் அஸீஸ் பிரதம அதிதியாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல். அப்துல் அஸீஸ் கௌரவ அதிதியாகவும் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.
தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர்களான கலாநிதி எஸ்.அனுஷியா சேனாதிராஜா, எம்.எம்.பாஸில் ஆகியோர் நூல் பற்றி சிறப்புரையாற்றவுள்ளனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.