நாளை ஜனாதிபதி
ஆணைக்குழுவிற்கு
சிராந்தி ராஜபக்ஸ அழைப்பு!
முன்னாள்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் துணைவியார் சிராந்தி
ராஜபக்ஸவிடம் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக நாளை முதலாம் திகதி திங்கள்கிழமை
பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அவர்
அழைக்கப்பட்டுள்ளார்.
தனது
ஊடகச் செயலாளருக்கு குறைந்த பெறுமதிக்கு வீடொன்றை வழங்குமாறு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி
அதிகார சபைக்கு வழங்கிய உத்தரவு தொடர்பில் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்ளவே சிராந்தி
ராஜபக்ஸ அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
கஹதுடுவ
பிரதேசத்தில் உள்ள குறித்த வீடு 5 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ள போதும், அதன் சரியான
பெறுமதி 55 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிகின்றன.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.