தென்னாபிரிக்கா உயர் ஸ்தானிகருடன்
முஸ்லிம் காங்கிரஸ்
தலைவர் ரவூப் ஹக்கீம் கலந்துரையாடல்
ரஹ்மத் மன்சூரும் கலந்து கொண்டார்
தென்னாபிரிக்கா உயர் ஸ்தானிகர் ஜிஓப் டொய்ட்ஜ், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப்
ஹக்கீம் அவர்களை நேற்று 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை)
பிற்பகல் அவரது அமைச்சில் சந்தித்து நீண்ட நேரம் கலந்துரையாடினார். உயர்
ஸ்தானிகராலய அரசியல் ஆலோசகர் செல்வி சி. ஜொபேர்ட் அவர்களும் இதில் பங்குபற்றினார்.
இக்கலந்துரையாடலில் அமைச்சரின் இணைப்புச் செயலாளரும் கட்சியின் உயர்பீட
செயலாளருமான ரஹ்மத் மன்சூரும் கலந்து கொண்டார்.
இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வை காண்பதற்கு வழிவகுக்கும்
வகையில் உத்தேச அரசியலமைப்பு சீர்த்திருத்தமானது சகல சமூகத்தினரையும்
திருப்திப்படுத்தக் கூடியதாக அமைய வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் ஹக்கீம் உயர்
ஸ்தானிகரிடம் வலியுறுத்தியுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.