யாழ்ப்பாணத்தில் நில அதிர்வு!
மக்கள் பீதியில்!
யாழ். புத்தூர் மேற்கு நவகிரி எனும் பகுதியில் இன்று நில
அதிர்வொன்று உணரப்பட்டுள்ளதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை காலை 02.45 மணி முதல் 03.00 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் இந்த நில அதிர்வு
உணரப்பட்டுள்ளதாக அவர்கள்
குறிப்பிட்டுள்ளனர்.
நில அதிர்வு காரணமாக அந்த பகுதியில் உள்ள வீடுகளில்
வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் கூறியுள்ளனர்.
குறித்த பகுதியில் 100 மீற்றருக்கு அதிகமான நிலப்பகுதியில் இவ்வாறு
வெடிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தை கேள்வியுற்ற அதிகாரிகள் அங்கு விரைந்துள்ளனர்
எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.