ஏ.ஆர்.ஏ. ஹபீஸின் பதவி
வெற்றிடத்துக்கு
திருக்கோணமலை மாவட்டத்தை
பிரதிநிதித்துவப்படுத்த
எம். ஷெரீப் தெளபீக்
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற
உறுப்பினரான ஏ.ஆர்.ஏ ஹபீஸ், கடந்த 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தனது நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியை இராஜினாமாச் செய்ததையடுத்து,
அந்த வெற்றிடத்துக்கு எம்.
ஷெரீப்.தௌபீக்கின் பெயரை ஐக்கிய தேசியக் கட்சி பரிந்துரைத்துள்ளதாக
அறிவிக்கப்படுகின்றது.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின்
விருப்பத்தின் நிமிர்த்தமே இவரின் பெயரை ஐக்கிய தேசியக் கட்சி பரிந்துரைத்துள்ளது.
.ஷெரீப்தௌபீக்
அவர்கள் கடந்த
2015 ம் ஆண்டு
இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திருகோணமலையில்
ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் சார்பாக
ஐக்கிய தேசியக்
கட்சியுடன் இணைந்து போட்டியிட்டு சொற்ப வாக்குகளினால்
தோல்வியை தழுவியவர்
என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.