தன்னை
சிறை பிடித்திருந்தால் அது சிறந்த காரியம்
பிள்ளைகளைப்
பழிவாங்குவது தவறான விடயம்
-
வெலிகடை சிறைச்சாலையில் மஹிந்த ராஜபக்ஸ
தனது
மகனுக்கு பதிலாக தன்னை சிறை பிடித்திருந்தால் அது சிறந்த விடயம் என முன்னாள் ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
விளக்கமறியலில்
வைக்கப்பட்டுள்ள அவரது புதல்வர் யோஷித ராஜபக்ஸவை பார்வையிடுவதற்காக வெலிகடை சிறைச்சாலைக்கு
வருகைத் தந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அரசியல்வாதிகளிடம்
பழிவாங்கினால் பரவாயில்லை என தெரிவித்த மஹிந்த ராஜபக்ஸ, பிள்ளைகளை பழிவாங்குவது தவறான
விடயம் என கூறியுள்ளார்.
இந்த
நிறுவனம் தொடர்பிலான வழக்கில் டொக்டர் ஒருவர் பங்குதாரராக இருப்பதாகவும், அரசாங்கம்
அவரை அச்சுறுத்தி யோஷிதவின் பெயரை உள்வாங்கியிருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
கைது
செய்யப்பட்டுள்ளவர்களில் பலர் சுகயீனமுற்றுள்ளதாக சுட்டிக்காட்டிய முன்னாள் ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஸ, அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவில்லை எனவும் கவலை தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.