விளையாட்டு மற்றும் தேகாரோக்கிய மேம்பாட்டு
தேசிய வாரத்தை யொட்டி
சாய்ந்தமருது பிரதேச செயலகத்தினால்
சைக்கிளோட்டப் போட்டி!
இன்று 25 ஆம் திகதியிலிருந்து 30 ஆம் திகதி வரை “விளையாட்டு மற்றும் தேகாரோக்கிய மேம்பாட்டு தேசிய வாரம்” எனவும் ஜனவரி 30 ஆம் திகதி சனிக்கிழமை விளையாட்டு மற்றும் தேகாரோக்கிய மேம்பாட்டு தேசிய தினம் எனவும் அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையொட்டி சாய்ந்தமருது பிரதேச செயலகத்தினால் இன்று நடாத்தப்பட்ட சைக்கிளோட்டப் போட்டி நிகழ்வு பிரதேச செயலாளர் ஏ.எல்.சலீம்
தலைமையில் இடம்பெற்றது.
இப்போட்டி நிகழ்வில் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.அப்துல்
கபார் பிரதம அதிதியாகக் கலந்து சைக்கிளோட்டப்
போட்டியை ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் நிர்வாக உத்தியோகத்தர் எம்.உதுமாலெவ்வை
உட்படபிரதேச செயலக உத்தியோகத்தர்கள்
பலரும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.