இலங்கையில் அரசியல் கைதிகள் என எவரும் இல்லை
சுவிஸர்லாந்தில் பிரதமர்
ரணில் தெரிவிப்பு!
இலங்கையில் இனி தமிழ் அல்லது சிங்கள அரசியல் கைதிகள் என எவரும் இல்லை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சுவிஸர்லாந்தில் ஆரம்பமாகியுள்ள உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ள அங்கு சென்றுள்ள, ரணில் விக்ரமசிங்க, ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
போட் சிட்டி எனப்படும் கொழும்பு துறைமுக நகரத் திட்டத்துடன் இலங்கை முன்னோக்கி செல்ல எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் சீனாவின் முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடு செய்ய வருமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கையில் இனி தமிழ் அல்லது சிங்கள அரசியல் கைதிகள் என எவரும் இல்லை என தெரிவித்துள்ள அவர், பெரும்பாலானோர் நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர் விடுதலை செய்யப்படலாம் எனவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.