கொழும்பு
துறைமுகத்தில்
பிரித்தானிய
கடற்படையின் நாசகாரி போர்க்கப்பல்
பிரித்தானிய
கடற்படையின் எச்.எம்.எஸ்.டிபென்டர் எனும் நாசகாரி போர்க்கப்பல் ஒன்று கொழும்புத் துறைமுகத்தை
வந்தடைந்துள்ளது.
இலங்கை
மற்றும் பிரித்தானியாவுக்கு இடையிலான பாதுகாப்பு உறவுகள் முன்னேற்றமடைந்து வரும் தற்போதய
நிலையில் நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டுள்ள இக்கப்பலை, இலங்கை கடற்படையினர் கடற்படைச்
சம்பிரதாயமுறைப்படி வரவேற்றுள்ளனர்.
இதேவேளை
கொழும்பு கடற்படைத் தலைமையகத்தில் வைத்து இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்ர
விஜேகுணரட்ன, பிரித்தானியா கப்பலின் கட்டளைத்தளபதி கொமாண்டர் ஸ்டீபன் டபிள்யூ.ஜே.ஏ
ஹிகம் அவர்களை சந்தித்துள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.