மட்டக்களப்பில்
விபச்சார நிலையம் முற்றுகை!
முன்னாள் முதல்வர்
சிவகீதா பிரபாகரன் உள்ளிட்ட 7 பேர் கைது
மட்டக்களப்பு
மாநகர சபையின்
முன்னாள் மேயர்
சிவகீதா பிரபாகரன்
உள்ளிட்ட 7 பேர் இன்று 2016.10.23 (ஞாயிற்றுக்கிழமை) பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு-திருகோணமலை வீதியில்
சிவகீதா பிரபாகரனால்
நடத்திச் செல்லப்பட்ட
விடுதியொன்றில் பாலியல் தொழில் இடம்பெறுவதாக சந்தேகிக்கப்பட்டே
இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு
கிடைத்த இரகசிய
தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு
தேடுதலின்போது, சிவகீதா பிரபாகரன், அவரது கணவன்
உள்ளிட்ட 7 பேர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் பொலிஸார்
மேலதிக விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்றனர்.
அறைகள்
வாடகைக்கு விடப்படும்
என்ற பெயரில்
முன்னாள் முதல்வரின்
வீட்டின் ஒரப்
பகுதியில் வைத்து
இரண்டு பெண்களும்
ஐந்து ஆண்களும்
கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு
பொலிஸ் தலைமையத்தினால்
மட்டக்களப்பு நகரில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின்
போது மட்டக்களப்பு
- திருகோணமலை வீதியில் உள்ள முன்னாள் மேயரின்
வீட்டுடன் இணைந்த
கட்டிடத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தங்கும்
விடுதி என்ற
பெயரில் மட்டக்களப்பு
நகரில் விபச்சாரங்கள்
நடைபெற்று வருவதாக
அண்மைக்காலமாக பல்வேறு தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த முற்றுகை
நடைபெற்றுள்ளது.
சில
தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு நகரில் நடைபெறும்
விபச்சார நடவடிக்கைகள்
தொடர்பில் கடுமையான
நடவடிக்கையெடுக்குமாறு மட்டக்களப்பு பிராந்திய
பிரதிப்பொலிஸ்மா அதிபருக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற
நீதிபதி எம்.கணேசராஜா பணிப்புரைகள்
வழங்கியிருந்த நிலையில் இந்த முற்றுகை நடைபெற்றுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
முன்னாள்
முதல்வர் சிவகீதா
பிரபாகரன் மட்டக்களப்பு
மாநகரசபை முதல்வராக
2008 தொடக்கம் 2013வரையில் முதல்வராக
பதவி வகித்தமை
குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.