ஜனாதிபதி மைத்ரிபால
சிறிசேனவுடன்
இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஜெய்சங்கர் சந்திப்பு
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை, இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஜெய்சங்கர் இன்று கொழும்பில் சந்தித்தார்.
இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஜெய்சங்கர் இலங்கையில் 3 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். தனது பயணத்தின் முக்கிய நிகழ்வாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை ஜெய்சங்கர் சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, இருநாட்டு தலைவர்கள் தொடங்கி வைத்த பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
இதனையடுத்து இலங்கை அரசின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பல்வேறு வர்த்தகக் குழுக்களை வெளியுறவுத் துறை செயலாளர் ஜெய்சங்கர் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
மேலும், இந்த பயணத்தின் போது இருநாடுகளிடையே நிலவி வரும் மீனவர்கள் பிரச்சனை குறித்து விவாதிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கபடுகிறது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.