சாய்ந்தமருது குவாஷி நீதிமன்றக் கட்டடம்
பூர்த்தியாகியும் திறந்து வைக்கப்படவில்லை!
சுற்றிவர பாதுகாப்பு வேலிகள்அமைக்கப்படாததால் இந்நிலையாம்!!
பொலிவேரியன் குடியேற்றக் கிராமத்தில் நிர்மானிக்கப்பட்டுள்ள சாய்ந்தமருது கரைவாகு தெற்குப் பிரிவுக்கான குவாஷி நீதிமன்றக் கட்டடம் பூர்த்தியாகிய நிலையில் இக்கட்டடத்தைச் சுற்றிவர எந்த பாதுகாப்பு வேலிகளும் அமைக்கப்படாததால் இக்கட்டடம் திறந்து வைக்கப்படாமல் இருந்து கொண்டிருப்பதாக அறிவிக்கப்படுகின்றது.
நீதிமன்றக் கட்டடத்தைச் சுற்றிவர பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்படாததால் கட்டடத்தைப் பாதுகாக்க
முடியாத நிலை உள்ளதாகவும் நிழலுக்காக இக்கட்டடத்தைச் சுற்றி மரங்களை நடமுடியாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குவாஷி நீதிமன்றக் கட்டடத்தைச் சுற்றிவர பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்ட பின்னரே இக்கட்டடம் உரிய முறையில் திறக்கப்படல்
வேண்டும் என ஒரு சாரார் வற்புறுத்துகின்றனர் எனவும் கூறப்படுகின்றது.
குவாஷி நீதிமன்றக் கட்டடம் பூர்த்தியாகி பல மாதங்கள் கடந்தும் இக்கட்டடத்திற்கு மின்சார வசதி, குடிநீர் வசதிகள் உரிய காலத்தில் ஏற்படுத்திக் கொடுக்காத நிலையில் தற்போது மின்சார வசதி,
குடிநீர் வசதி என்பன வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களின் ஏற்பாட்டில் சுமார் 60 இலட்சம் ரூபா செலவில் சாய்ந்தமருது, கரைவாகு தெற்குப் பிரிவுக்கான குவாஷி நீதிமன்றக் கட்டடம் நிர்மானிக்க்ப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சாய்ந்தமருது கரைவாகு தெற்குப் பிரிவுக்கான குவாஷி நீதிமன்றத்தின் நீதிபதியாக டாக்டர் ஐ.எம். ஷெரிப் (ஜே.பி) கடமை செய்து வருகின்றார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.