ரவுடிகளின்
அட்டகாசம்!
பொலிஸார் மீது
வாள்வெட்டு இருவர் படுகாயம்
சுன்னாகம்
சந்தை பகுதியில்,
மர்ம நபர்கள்
இருவரால் மேற்கொள்ளப்பட்ட
வாள்வெட்டில் படுகாயமடைந்த பொலிஸார் இருவர், யாழ்ப்பாணம்
போதனா வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர் என சுன்னாகம்
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த
சம்பவம் இன்று 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
பகல் 2.30 மணிக்கு
யாழ் பிரபல
தனியார் பல்பொருள்
அங்காடி ஒன்றிக்கு
முன்னால் கடமையில்
ஈடுபட்டிருந்த பொலிஸார் இருவர் மீதே வாள்
வெட்டு தாக்குதல்
இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது., ரோந்து
கடமையில் ஈடுபட்டிருந்த
பொலிஸார் மீதே
வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளது.
இந்த
தாக்குதலில் நிமல் பண்டார மற்றும் பி.எஸ். நவரத்ன
எனப்படும் பொலிஸார்
இருவர் வாள்வெட்டுக்கு
இலக்காகியுள்ள நிலையில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மேலும்
குறித்த இருவரும்
பொலிஸ் புலனாய்வு
பிரிவைச் சேர்ந்தவர்கள்
எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆறு
பேருடன் வந்த
குழு ஒன்றின்
மூலமாகவே இந்த
வாள்வெட்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக
அறிய முடிகின்றது.
மோட்டார்
சைக்கிளில் இலக்கத்தகட்டையும், முகத்தையும்
துணியால் மறைத்தபடி
வந்த இருவரே
இவ்வாறு வாள்
வெட்டை மேற்கொண்டுள்ளனர்
எனத் தெரிவித்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.