ஜனாதிபதியின் பங்களிப்புடன் கண்டியில் இடம்பெற்ற
தமிழ் மொழித் தின விழா
கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் அகில இலங்கை தமிழ் மொழித் தின விருது வழங்கல் விழா இன்று 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை கண்டி தர்மராஜ கல்லூரி மண்டபத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றுள்ளது.
தேசிய ரீதியில் நடைபெற்ற தமிழ் மொழித்தினத்தை முன்னிட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதன் போது பாடசாலை மாணவர்கள் கலந்து கொள்ளும் கலை கலாச்சார நிகழ்வுகளும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களும் பரிசில்களும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கி வைக்கப்பட்டன.
அத்தோடு கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன், அமைச்சர்களான லக்ஸ்மன் கிரியல்ல, ரவுப் ஹக்கீம், மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க ஆகியோரும் இணைந்து பரிசில்களை வழங்கி வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.