அர்ஜுன் மகேந்திரன் வெளிநாடு சென்றுள்ளத சபையில்

உறுதிப்படுத்திய  பிரதமர் நாடு திரும்புவார் என்றும் தெரிவிப்பு


இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறிகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த அரச பொறுப்பு முயற்சிகள் தொடர்பான தெரிவுக்குழுவின் (கோப்) இறுதி அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று சமர்பிக்கப்பட்டப்போது உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, குறித்த குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன், வெளிநாடு சென்றுள்ளதை உறுதி செய்ததுடன் அவர் நாடு திரும்புவார் என்றும் சபையில் அறிவித்தார்.
திருமண நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காகவே, அவர் வெளிநாடு சென்றுள்ளார் என்றும் இந்நிகழ்வு முடிந்தவுடன் நாடு திரும்புவார் என்றும் பிரதமர் மேலும் கூறினார்.
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன்வெளிநாடு சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது இத்தகவல் உண்மையா பிரதமர் இதனை தெளிவு படுத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டபோதே இந்த பதிலை பிரதமர் சபையில் தெரிவித்தார்.


0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top