ஐ. தே. கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர்
திஸ்ஸவை பார்க்க
சிறைக்குச் சென்ற முன்னாள ஜனாதிபதி மஹிந்த
விளக்கமறியலில்
வைக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள்
பொதுச்செயலாளர், திஸ்ஸ அத்தநாயக்கவை சந்திப்பதற்காக, முன்னாள
ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஸ, வெலிக்கடை
சிறைச்சாலைக்கு இன்று20 ஆம் திகதி வியாழக்கிழமை சென்றார்.
திஸ்ஸ
அத்தநாயக்கவை பார்த்து நலம் விசாரித்த மஹிந்த,
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “எந்த நேரத்தில்
விடுதலை புலிகள்
தாக்குதல் நடத்துவார்கள்
என்று தெரியாததால்
யுத்தக் காலத்தில்
மக்கள் சரியாக
உறங்கவில்லை.
ஆனால் இன்று, எந்த
நேரத்தில் எப்.சி.ஐ.டி, சி.ஐ.டியினர்
வீட்டுக்குள் நுழைவார்கள் என்று தெரியாததால் யுத்தக் காலத்தைப் போன்று இப்போதும் மக்கள்
சரியாக உறங்குவதில்லை.
இந்த அரசாங்கத்தின்
ஒரே வேலை
பழிவாங்குவது மட்டுமே” என்று தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.