மகஜர் கையளிப்புடன் பல்கலைக்கழக மாணவர்கள்
போராட்டம் நிறைவு
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள்
படுகொலைக்கு நீதிகோரி அமைதியான முறையில்
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய
கவன ஈர்ப்பு போராட்டம் ஜனாதிபதி, பிரதமருக்கான
மகஜர் கையளிப்புடன்
நிறைவுக்கு வந்தது.
இந்த
மகஜரானது யாழ்.
பல்கலைக்கழக அனைத்துப் பீட மாணவர் ஒன்றியத்
தலைவர்களினால் யாழ் அரசாங்க அதிபர் மற்றும்
வட மாகாண
ஆளுனர் சார்பாக
அவரது பிரதிநிதியிடம்
கையளிக்கப்பட்டு அவர்கள் ஊடாக ஜனாதிபதி, பிரதமருக்கு
அனுப்பி வைக்கப்பட்டதுடன்.
மாணவர்களின் இன்றைய போராட்டம் மிகவும் அமைதியான
முறையில் முடிவுற்றது.
இதனையடுத்து
துண்டிக்கப்பட்டிருந்த ஏ9 வீதியூடான
போக்குவரத்து வழமைக்கு திரும்பியதுடன் யாழ் மாவட்ட
செயலக பணிகளும் இயல்பு
நிலைக்கு திரும்பின.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.