மனித உருவில் ஆட்டு குட்டி!
தமிழகத்தில் ஆடு ஒன்றின் வயிற்றில் மனித உருவில் குட்டி இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலே இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சிப்காட் அடுத்துள்ள நர்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணி விவசாயி., இவர் தனது தோட்டத்தில் 15 ஆடுகளை வளர்த்து பராமறித்து வந்துள்ளார்., கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கரு உண்டான ஆடு ஆறு மாதம் கடந்த பிறகும் குட்டி போடவில்லை, இன்று காலை ஆடு நிலைதடுமாறி விழுந்துவிடவே ஆட்டின் வயிற்றை கிழித்து எடுத்து பார்த்தபோது மனித உருவில் ஆட்டு குட்டி இருந்தை பார்த்து விவசாயி மணி அதிர்ச்சி அடைந்துள்ளார்.
ஆடு மனித உருவில் குட்டியை ஈன்றதால் தகவல் கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் பரவி பெரும் பரப்பை எற்படுத்தியுள்ளது இது குறித்து விவசாய மணி குறிப்பிடும் போது மட்டும் 15 ஆடுகளை வளர்த்து வருகிறேன். இந்த ஆடும் இதன் தாய் ஆடும் கடந்த 3 வருடங்களாக என்னிடமே வளர்ந்து வந்தது., குட்டி ஆடாக இருந்தபோது இருந்து இந்த ஆட்டை நான் வளர்த்து வருகின்றேன். ஆறு மாதங்கள் கடந்த பிறகு ஆடு குட்டி போடவில்லை சந்தேகத்துடனே ஆட்டை பராமறித்து வந்தேன்.
ஆட்டின் வயிறு மட்டும் வழக்கத்தை விட பெரியதாக இருந்தது. இரண்டு குட்டி இருக்கும் என்று எண்ணி வந்தேன். ஆனால் இன்று காலை ஆடு தண்ணீர் கூட குடிக்க முடியாமல் நிலை தடுமாறி சரிந்து விழுந்துவிட்டது வேறு விழியில்லாமல் நானே ஆட்டின் வயிற்றை கிழித்து எடுத்து பார்த்தபோது பார்த்தபோது மனித வடிவிலான ஆட்டு குட்டி
பார்த்து அதிர்ச்சி அடைந்துவிட்டேன் உயிருடன் சில நிமிடங்கள் மட்டுமே இருந்தது பிறகு இறந்துவிட்டது. கலி காலத்தில் இப்படி எல்லாம் நடக்கின்றதே இது நல்லதா? கெட்டதா... என்று தவித்தார் விவசாயி மணி மனித உருவ ஆட்டு குட்டி தகவல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரபரப்பை கிளப்பிள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.