ஐக்கிய தேசியக் கட்சியின்
முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு
டிசம்பர் மாதம் ஐந்தாம் திகதி வரை விளக்கமறியல்
ஐக்கிய
தேசியக் கட்சியின்
முன்னாள் பொதுச்
செயலாளர் திஸ்ஸ
அத்தநாயக்கவை டிசம்பர் மாதம் ஐந்தாம் திகதி வரை
விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேல்நீதி மன்றம் இதற்கான உத்தரவை இன்று 19 ஆம் திகதி பிறப்பித்துள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் கையொப்பம் இட்டதாக கூறி போலி ஆவணம் ஒன்றை வெளியிட்டமை தொடர்பில் திஸ்ஸ அத்தநாயக்கவின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இன்று அவர் நீதிமன்றில் ஆஜரானபோதே அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.