ஜெயலலிதாவின் படத்தை தனக்கு முன்பாக வைத்துக் கொண்டு அமைச்சரவைக் கூட்டத்தை வழிநடத்திய பன்னீர்செல்வம்

முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை தனக்கு முன்பாக வைத்துக் கொண்டு தமிழக அமைச்சரவைக் கூட்டத்தை ஓ. பன்னீர்செல்வம்  வழிநடத்தினார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று 19 ஆம் திகதி புதன்கிழமை  காலை 9.30 மணியில் இருந்து 10.30 மணி வரையில் .பன்னீர்செல்வம் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடந்தது.
அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்கள் யாரும் விவாதத்தில் ஈடுபடவில்லை. தொடக்கம் முதலே அனைவரும் மௌனமாகவே இருந்தனர். ஒவ்வொரு அமைச்சருக்கும் சில தாள்கள் கொடுக்கப்பட்டன. அதில், முடிவு எடுக்கப்பட வேண்டிய விவகாரங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தன. அதைப் படித்துப் பார்த்துவிட்டு அமைச்சர்கள் கையெழுத்திட்டனராம்..

 பத்து நிமிடத்தில் முடிந்திருக்க வேண்டிய கூட்டம். ' அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது' என்ற தோற்றம் தெரிய வேண்டும் என்பதற்காகவே, அனைவரும் ஒரு மணி நேரம் காத்திருந்தனர்" என தலைமைச் செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை தனக்கு முன்பாக வைத்துக் கொண்டு கூட்டத்தை பன்னீர்செல்வம்  வழிநடத்துவதைக் காணலாம்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top