இளவரசர் அல்-கபீர் சக
இளவரசர் ஒருவரைச் சுட்டுக்கொன்ற
கொலை குற்றத்துக்காக தூக்கிலிடப்பட்டார்
சகோதரி
மகன் உறவுமுறையிலுள்ள சக இளவரசர் ஒருவரைச் சுட்டுக்கொன்ற குற்றத்துக்காக, இளவரசர் அல்-கபீருக்கு
தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
சவூதியை சேர்ந்த
இளவரசர் துர்கி
பின் சவுத்
அல்-கபீர்
என்பவருக்கு நேற்று தூக்கு தண்டனை
நிறைவேற்றப்பட்டுள்ளது.
அரச
குடும்பத்து இளவரசரரான அல்-கபீர் தன்
சகோதரி மகன்
உறவுமுறையிலுள்ள ஷேக் பாசில் சாலிம் சபா
அல்சலிம் என்கிற
மற்றோர் இளவரசரைத்
கடந்த 2010-ம் ஆண்டு துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்.
இந்த
சம்பவம் தொடர்பாக
வழக்கு குவைத்
குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்,
கடந்த 2014-ம் ஆண்டு இளவரசர் அல்-கபீருக்கு, சட்ட
அடிப்படையில் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
குற்றவாளியான
இளவரசர் ஷேக்
ஃபைஸல் குவைத்
இராணுவத்தில் 'கேப்டன்' அந்தஸ்தில் பணிபுரிபவர் ஆவார்.
அரசில்
எந்தப் பொறுப்பும்
வகிக்காததால், ஷேக் பாசிலின் கொலைக்கு எந்த
அரசியல் காரணமும்
இல்லை என்று
அரசுத் தரப்பு
தெரிவித்திருந்தது.
கொலையுண்ட
இளவரசர் ஷேக்
பாசில், 1977 வரை குவைத் மன்னராக இருந்த
ஷேக் சபாஹ்
சாலிம் அல்
சபாவுடைய பேரனாவார்.
அவருடைய தந்தை
ஷேக் சாலிம்
1975 வரை அமெரிக்கா,
கனடா, வெனிசுலா
நாடுகளில் தூதராகப்
பொறுப்புவகித்தவர் ஆவார். அதன்பின்
நாடு திரும்பி,
மந்திரிசபையில் பல்வேறு பொறுப்புகளை ஏற்றிருந்தார். எனினும்,
அண்மையில் உடல்நலக்
காரணத்தால் அரசியலிலிருந்து ஒதுங்கிவிட்டார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.