டாக்டர்களுடன் முதல்வர் ஜெயலலிதா பேசுகிறார்
அப்பல்லோ அறிக்கை
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை சீராக முன்னேற்றம் கண்டு வருவதாகவும் டாக்டர்களுடன் அவர் பேசுவதாகவும் அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து அப்போலோ 10-வது அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக, இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:
முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து மருத்துவ சிகிச்சையில் உள்ளார். அவருக்கு அளிக்கப்படும் செயற்கை சுவாசம், பிஸியோதெரபி மற்றும் முக்கிய உதவிகளையும் மருத்துவர் குழுவினர் கண்காணித்து வருகிறார்கள்.
தீவிர சிகிச்சை பிரிவு, இதய நோய் நிபுணர்கள், சுவாச உதவியாளர்கள், கிருமி தொற்று துறை ஆலோசகர்கள், நீரிழிவு நோய் நிபுணர்கள் ஆகிய மருத்துவ நிபுணர்கள் முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். ஊட்டச் சத்து துறையினர் வழங்கும் ஆலோசனையின்படி முதல்வர் உணவு எடுத்து கொள்கிறார்.
முதல்வரின் உடல்நிலை சீராக முன்னேறி வருகிறது. அவர் டாகடர்களுடன் பேசுகிறார்.இவ்வாறு அந்த அறிக்கை கூறப்பட்டுள்ளது.
அப்போலோவின் 9-வது அறிக்கை கடந்த 10-ம் திகதி வெளியாகியிருந்தது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.