யாழ் செயலகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம்
ஆளுநர் அலுவலகமும் முற்றுகையிடப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள்  இருவரின்   கொலையை கண்டித்து, குறித்த பல்கலையின் மாணவர்கள் யாழ்.மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று (திங்கட்கிழமை) காலை மாவட்ட செயலகத்தை சூழ்ந்த மாணவர்கள், கொலையுண்ட மாணவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென வலியுறுத்தி, மாவட்ட செயலகத்தின் சகல வாயிற்கதவுகளையும் மூடி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகி ன்றனர்.
மாவட்ட செயலகத்தின் அனைத்து வாயில்களும் மூடப்பட்டுள்ளதனால் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கடமைகளுக்குச் செல்ல முடியாமல் வெளியே காத்திருக்கின்றனர் என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகமும் பல்கலைக்கழக மாணவர்களால் முற்றுகையிடப்பட்டு ள்ளது.

கொலையுண்ட மாணவனான கிளிநொச்சியைச் சேர்ந்த கஜனின் இறுதிக்கிரியைகள் நேற்று நடைபெற்றதோடு, மற்றொரு மாணவனான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுலக்ஷனின் இறுதிக்கிரியைகள் இன்று நடைபெறவுள்ளமையும்  குறிப்பிடத்தக்கது.











0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top