மட்டக்குளி பகுதியில் துப்பாக்கிசூடு நால்வர் பலி



மட்டக்குளி பகுதியில் சமிட்புர பிரதேசத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் நால்வர் உயிரி ழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பத்துக்கும் மேற்பட்டவர்கள் மீது இனந்தெரியாத கும்பல் ஒன்று தாக்குதல் மேற்கொண்டு ள்ளது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த ஆறு பேர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்களில் நால்வர் உயிரிழந்ததாகவும் ,மற்றும் படுகாயமடைந்த இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

என்ன காரணத்திற்காக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என்பது தொடர்பில் தகவல் வெளியாகவில்லை.

இதேவேளை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு ருகின்றனர்


பாதாள உலக குழு தலைவர் பலி

மட்டக்குளி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பாதாள உலக குழு தலைவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் இருவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதென வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பாதாள உலக குழு தலைவரானகுடு சூட்டிஎன்ற நபரே உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.


0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top