எனது தந்தையின் பிறந்த நாளுக்காய்......
மரீனா மன்சூர் நளிமுத்தீன்
எனது தந்தையின் பிறந்த நாளுக்காய்........
வாழ்த்துச் செய்திகள்
வாசலை
தட்டும் போது தான்
உனக்கே தெரியும்
அன்று
உனது
பிறந்த நாள் என்று!
வாழ்க்கையில்
எதனையும்
அலட்டிக் கொள்ளாதவன்
நீ !
நான் அறிந்த
உனது
வாழ்க்கை
அரசியல்!
மக்கள்!
புத்தகங்கள் .........
சிகரங்களை
கண்டவர்கள் உண்டு
அரசியலால்
பல
நகரங்களை
கண்டவர்களும் உண்டு
ஆனால்
கல்முனை நகர்
சிகரமாக மாறியது
உன் திறமை!
சட்டப்படிப்பு
உனக்கு
கறுப்புக் கோட்டு
போட்டு விட்டாலும்
வெள்ளை
மனதுடன் - நீ
பேசும்
கிராமியத் தமிழ்
உனக்கு
அரியாசனம்
போட்டு கொடுத்தது!
உன்னிடம்
இவர்கள்
நிறைய
கற்று கொள்ள வேண்டும்
கரை படாத
அரசியல் மட்டும் அல்ல ........
ஐ . நா . சபை
வரை
நீ பேசினாய்
இன்றைய
அரசியல் வாதிகள்
அடுத்த வீட்டுக்காரனோடு கூட
பேசுவதில்லை!
மக்கள் சான்றோனானால்
பூரிக்கும் பெற்றோர்
உண்டு
ஆனால்
என்- தந்தை
ஓர்
ஆன்றோன்
என்ற பூரிப்பே
எனக்கு
பிடித்திருக்கிறது!
உனக்கு
மகளாய் பிறந்தது
இறைவன்
எனக்கு
அருளிய வரம்!
வாழ வேண்டும்
நீ
நீடூழி!
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.